Pudumai
ISBN 9789358782066

Highlights

Notes

  

நன்றியுரை

ஒரு புத்தகம் எழுதுவது மிகவும் கடினம். ஆனால் அதை வெளியிடுவது நான் நினைத்ததை விட கடினமானது என அறிந்து கொண்டேன். எனக்கு, வாழ்க்கை, நல்ல மனிதர்களை பரிசளித்து இருக்கிறது. இவர்களின் நல்லாசிகள் தான் நான் வழக்கை எனும் போர்க்களத்தில் வெற்றி வாகை சூட காரணம். எனவே, அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை பணிவுடன் இங்கு பதிவிடுகிறேன்.

என் பெற்றோருக்கு, அவர்கள் இல்லாமல், நான் முற்றிலும் ஒன்றுமில்லை. எல்லாவற்றிலும் சிறந்ததை எனக்கு வழங்கியதற்கும், நான் விரும்புவதைத் தொடர என்னைத் தூண்டுவதற்கும் நன்றி. அன்புள்ள அம்மா & அப்பா, இந்த வாழ்வின் பெரும் பாக்கியமே நீங்கள் இருவரும் என்னை பெற்றவர்களாய் இருப்பதுவே.

எழுத்து அறிவித்தவன் இறைவனாவான். ஆம், எனக்கு எழுத்து கற்பித்த அனைத்து இறைவர்களுக்கும், அனைவரையும் இயக்கம் அன்பெனும் பெரும் சக்தியாய் இருக்கும் கடவுளுக்கும் என் நன்றிகள்.

தேசபக்தர்களுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், அன்னை இந்தியாவை சுதந்திர நாடாகக் காண்பதற்கு, தங்களால் இயன்ற அனைத்தையும் தியாகம் செய்த, அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகள்.. இந்நாளில் நான் உறுதிமொழி அளிக்கிறேன், சுதந்திரத்தைப் போற்றும் வகையில், சிறந்த குடிமகனாக இருப்பேன் என்று.

இன்றுவரை, இந்தியாவின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, தியாகங்களின் உருவகமாக விளங்கும் நாட்டின் எண்ணற்ற வீரர்கள் அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன். நாட்டுக்காக நீங்கள் செய்யும் அனைத்திற்கும் நன்றி. நீங்கள் இல்லாமல், பயமற்ற தூக்கம் ஒரு ஆடம்பரமாக இருக்கும்.

16Leaves பதிப்பாளர்கள், எப்போதும் முன் வந்து எனது புத்தக பிரதிகளை ஆய்வு செய்து அழகான புத்தகமாக மாற்ற உதவுகிறார்கள். அவர்களின் சிறந்த அணி, எனக்கு கிடைத்து, என் பாக்கியமே. 16leaves-ன் ஆர்த்தி வாலியா மற்றும் தீபாலி சாவந்த் அவர்களுக்கு தனிப்பட்ட நன்றிகள்.

எனது புத்தகத்திற்கான தங்கள் நல்லாசிகள் மற்றும் முன்னுரைகளை வழங்க தங்கள் நேரத்தை ஒதுக்கிய அனைத்து வழிகாட்டிகள் மற்றும் பெரியவர்களுக்கும் நான் கடமை பட்டிருக்கிறேன். உங்களின் ஆசிகள் எனக்கு மிகவும் உந்துதலாக இருக்கிறது, சாதனைகள் செய்ய, மேலும் அதிகமாகச் செய்ய வேண்டும். மிகக் குறுகிய காலத்தில் பதிலளித்ததற்காக மிலிண்ட் ஐயா அவர்களுக்கு சிறப்பு நன்றி.

எனது சிறிய சகோதரன், யோகேஷ், எனது நண்பன், எனது போட்டியாளன், எனது பங்காளி, எனது அனைத்துமாய் இருக்கும் குட்டிக்கு, என் பக்கத்தில் இருந்து மேலும் மேலும் எழுத என்னைத் தூண்டியதற்காக உனக்கு என் அன்பு முத்தங்கள்.! உண்மையிலே, தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!

கடைசியாக, எனது அன்பான வாசகர் நண்பர்களுக்கு - எனது புத்தகங்கள், வலைப்பதிவுகள் மற்றும் கதைகளைப் படித்து, நாளுக்கு நாள் நான் முன்னேற உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை வழங்கியதற்கு நன்றி. எப்பொழுது போலவே இந்த படைப்பையும் ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன்.